Tuesday, 4 February 2025

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர் 

600 - 900 - பல்லவர், பாண்டியர்

850 - 1150 - சோழர்

1100 - 1350 - பிற்கால பாண்டியர்

1300 - 1565 - விஜயநகரம்

1565 - 1800 - நாயக்கர்கள், நகரத்தார்




Tuesday, 18 July 2023

உபகிரீவம்

 ஒரு தளம் முடிந்த பிறகு அடுத்த தளத்திற்குப் பதிலாக (தளக் கணக்கீடு அளவை விடக் குறைவாக) அமைக்கும் சுவர் உப கிரீவம்.இதில் அமையும் சிகரங்கள் கீழ்த்தளத்திற்கு உரியவை .

உப கிரீவம் விமானத்தின் ஆகிருதியை அதிகப் படுத்தி காட்டுவதற்காக மட்டுமல்ல. கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானின் அடிப்படை அளவிற்குத் தகுந்த விமானம் எழுப்ப படும் போதும் உபகிரீவம் பயன்படும்( சுயம்பு லிங்க ரூபங்களின் அளவிற்குத் தக்கவாறு அல்லது ஸ்தானக விஷ்ணு மூலபேரமூர்த்திக்குத் தக்கவாறு) 

உபகிரீவம்
(படம்: திரு ராஜவேலு)

மேற்படி விமானம் முதல் பார்வையில் இரு தள விமானம் போலத் தோற்றமளித்தாலும் ஆதி தளத்திற்கு மேல் உள்ள சுவரின் உயரம் ஒப்புநோக்க மிகக் குறைவானதாக உள்ளதைக் காண்க. இது உப கிரீவம். ஹாரத்தின் சாலை ஆதி தளத்தின் பத்ர நீட்சியின் மீதும், கர்ணக் கூடுகள் உப கிரீவத்தின் மூலைகளிலும் அமைந்துள்ளன. ஆனாலும் ,இரண்டுமே ஆதி தளத்திற்கே உரியவை. ஆகவே இது ஏக தள விமானம்தான். ஸ்ரீவிசாலம்.

படம்: டாக்டர் சுரேந்திரன்

கருத்து: டாக்டர் சுரேந்திரன், கோயில் கட்டடக் கலை ஆர்வலர்





Monday, 16 January 2023

கல் தொட்டி

 

வேலூர் கோட்டை ஏ. எஸ். ஐ. அலுவலகத்தில் இருக்கும் கல்தொட்டி. 
இது போன்ற கல்தொட்டிகள் கோயில்களில் பயன்பாட்டில் இருந்துள்ளன.

வேலூர் கோட்டையில் ஜலகண்டேசுவரர் கோயிலில்.
அபிஷேக நீர் சேகரிக்க.

திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயிலில் உள்ள கல் தொட்டி.
மேலும் கீழும் வேலைப்பாடுகள் கொண்டது.
இது போன்ற தொட்டிகள் அபிஷேகத்திற்கான நீர், விளக்கேற்றுவதற்கான எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி வைக்க பயன்பட்டுள்ளன. சில கல் தொட்டிகளில் 'நெய் தொட்டி', 'விளக்கு எண்ணெய் தொட்டி' என்று பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு கல் தொட்டியில் நெய் தொட்டி என்று எழுதப்பட்டுள்ளது. 

திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயிலில் உள்ள மற்றொரு கல் தொட்டி.
அழகிய கோலாட்டச் சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது.

தஞ்சை கல் தொட்டி. இதன் கொள்ளளவு குறிக்கப்பட்டுள்ளது
(படம், செய்தி நன்றி: கல்வெட்டு வகுப்பு IT 2022 வாட்ஸ் அப் குழு)



Saturday, 10 September 2022

உள்ளடக்கம்

திராவிடக் கட்டடக்கலை - அடிப்படைகள்

பொது

பித்தி
பிரஸ்தரம்


கோயில் வளாகம்


திராவிடக் கட்டடக்கலை - மேலும் 


திராவிடக் கட்டடக்கலை - சிறப்புப் பகுதி






கலைச்சொல் பட்டியல்

கோட்ட பஞ்சரம்

  • கோட்டம் / தேவ கோட்டம்
  • நகுல பாதம் / அணைவுத் தூண்கள்
  • மேலே உத்திரம், வாஜனம், வலபி போன்ற கூரை
  • மேலே தோரணம் அல்லது 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சாலாகார விமான அமைப்பு

நாசி, நாசிகை, கூடு
  • காடம்
  • தோரணப்பட்டி
  • சிகை
  • சிம்ம வக்ரம்
  • அல்ப நாசி
  • ஷூத்ர நாசி
  • பால நாசி
  • மகா நாசி
  • அனு நாசி
  • லலாட நாசி / குக்ஷி நாசி
  • சுக நாசி
  • வம்ச நாசி
  • நேத்ர நாசி

தோரணம்
  • காடம்
  • தோரணப்பட்டி
  • சிகை
  1. பித்தி தோரணம் / குட்ய தோரணம்
  2. துவார தோரணம் / வாயில் தோரணம்
  3. ஸ்தம்ப தோரணம்
  1. பத்ர தோரணம்
  2. மகர தோரணம்
  3. சித்ர தோரணம்

பஞ்சரம்
  • இரட்டைக்கால் பஞ்சரம்
  • ஒற்றைக்கால் பஞ்சரம் / விருத்த ஸ்புடிதம் - பத்மாசனம் (அஸ்வ பாதம்), கும்பம், வாய் (ஆஸ்யம்), தாடி, குடம், பலகை, பிரஸ்தரம், கர்ண கூடம் முதலியன. மேற் பகுதியில் பூரிமம், கூடம், தூங்கானை விமானம், சாலை விமானம், அல்லது சுக நாசி. உடல் வட்டமாக மட்டும் இன்றி சதுரம், எண்பட்டை, பத்திருப்பு.
  • கும்ப பஞ்சரம் / கும்ப லதா
  • கபோத பஞ்சரம்
  • நிஷ்கராந்த பஞ்சரம்

ஜாலகம்
  • கோநேத்திரம் (கவக்சா)
  • ஹஸ்தி நேத்திரம் (குஞ்சரக்சா)
  • நந்தியாவர்த்தம்
  • ருஜிக்ரியம்
  • அப்ஜவர்த்தம்
  • புஷ்பகரணம்
  • சமகர்ணம்
  • வல்லி மண்டலம்
  • ஸ்வஸ்திகம்
  • வட்டம்

பிரநாளம் / கோமுகை
நிர்மாலயம் / நிர்மால்ய நீர்
திசை
இடம்
பாத்திரம்
நிர்மால்ய துவாரம்
முகம்
நாளம் / அம்பு மார்க்கம்
லிங்க வடம்
பூமுனை
தாங்கி

துவாரம் (வாயில்)
புவங்கம்
பதங்கம்
நிலைக்கால் / ஸ்தம்ப யோகம்
சாகா - வல்லி, பத்ம, இரத்தின, நாக
நாகபந்தம்
லலாட பட்டம்
சுத்த துவாரம்


சோபானம்
சந்திர சிலா
பலகா
ஹஸ்தம் - கஜ / ஹஸ்தி, வியாழ
யஷ்டி - துதி யாளி, ஹஸ்தி யாளி
திரிகண்ட சோபானம்
பக்ஷ சிலா
அர்த்த கோமுத்ர
சங்க மண்டலம்
வல்லி மண்டலம்


பிரஸ்தரம்
மற்றப் பெயர்கள் - விதானம், விடாணம், மத்தவாரணம், கோபானம், பிரச்சாதனம், கபோதகம், வலபி, லுபம் 

உத்தரம்
  • உத்தரம் - கண்டோத்ரம், பத்ர பந்தம், ரூபோத்ரம்
  • கம்பு/ வாஜனம்
  • வலபி/ எழுதகம் / பூத மாலை/ பூதமாலோநதம் - பூதங்கள், அன்னங்கள் (ஹம்சம்), புறாக்கள், ஊர்த்துவ பத்மம்), மதலை 
  • வாஜனம்
கபோதம்
வியாழம் / பூமி தேசம் - ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாஜனம்

கோண பட்டம்
சதுர பட்டம்


பித்தி / பாத வர்க்கம்
  • வேதி (தனி)
  • தூண்கள் (தனி)
  • பத்திகள்
  • கோட்டங்கள் (தனி)
  • பஞ்சரங்கள் (தனி)
குட்ய ஸ்தம்பம் / அரைத் தூண்
ஜஷால   ஸ்தம்பம் 
நிகாத ஸ்தம்பம் (நிகாந்தரி)

பத்தி - சாலை, கர்ண, பஞ்சர, 
அகாரை
பத்ரம் - சம பத்ரம், சுபத்ரம், உபபத்ரம்
சாலாந்தரம்

பித்தி - பாஹ்ய, அந்தர
அலிந்தம்
சாந்தாரம்
நிராந்தரம்

ஊர்த்துவ ஜங்கா, அதோ ஜங்கா


தூண்
ஸ்தம்பம், கால், பாதம், கம்பம்

  • ஓமா
  • உடல்
  • மாலைத்தொங்கல்
  • மாலாஸ்தானம்
  • தாமரைக்கட்டு
  • கலசம் / லசூனா
  • தாடி
  • கும்பம் / அமலகம்
  • மண்டி -  பாலி,  பத்ம மண்டி, நாகதலை மண்டி
  • பலகை
  • வீர கண்டம்  / சிகை / சிகா

மேல் உறுப்புகள் இருந்தால்
  • பிரம்ம காந்தம் 4
  • விஷ்ணு காந்தம் 8
  • இந்திர காந்தம் / ஸ்கந்த காந்தம் 6
  • சந்திர காந்தம் / சௌமிய காந்தம் 16
  • ருத்ர காந்தம்
  • பத்ர காந்தம்
மேல் உறுப்புகள் இல்லாவிட்டால்
  • ஸ்ரீ ருத்ர காந்தம்
  • மத்ய ருத்ர காந்தம்
  • சிவகாந்தம்
  • பூர்வஸ்ரம்
  • பெயரில்லா வகைகள் - சதுரம், 16 பட்டை
சித்ர கண்டத் தூண் - ஸ்ரீகண்டம் (8 பட்டை), ஸ்ரீவஜ்ரம் (16)
பிண்டி பாதம்
ஸ்ம்யுக்த தூண்

பாத வகைகள்
  • சிம்ம பாதம்
  • யாழி பாதம்
  • இப பாதம்
  • பூத பாதம்
  • பித்தி தூண்கள்
  • மண்டபத் தூண்கள்
  • தோரணத் தூண்கள்
  • தனித் தூண்கள்
நாகபந்தம்
புஷ்ப பந்தம்
பூதம் 

தாரு ஸ்தம்பம் 

ஹாரம்

ஹாராந்தரம்
  1. கர்ண கூடம் 
  2. சாலை 
  3. பஞ்சரம் 
நாசி கோஷ்டம்
நேத்ர கோஷ்டம்
ஹர்மியம் / அரமியம் /கிரக பிண்டி

அர்பிதம்
அனர்பிதம்
அலிந்தம்

ஏறு சாலை
இறங்கு சாலை

பத்ரம்
பத்ர சாலை
சுபத்ரம் 
உப பத்ரம் 

சொறுவு சாலை
முக சாலை

4 அங்கம் - வேதி, பித்தி, சிகரம், ஸ்தூபி
6 அங்கம் - வேதி, பித்தி, பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி

அந்த்ர பிரஸ்தரம்
ஷூத்ர நசி
பார வாஹகா / விமானம் தாங்கிகள்
கதலிகா கர்ணம்
கண்ட ஹர்மியம்
சாலாஹாரம்


ஸ்தூபி
  • பத்மம்
  • குடம்
  • பாலிகாநாளம்
  • குட்மலம்
  • ஸ்தூபித் தண்டு

கிரீவம் / கண்டம் / கர்ணம் / களம்
  • வேதி
  • கிரீவம் 
  • கிரீவ கோஷ்டங்கள்
  • வலபி

சிகரம் / சிரம் / மஸ்தகம் / பண்டிகை
  • ஓஷ்டம் (அதில் சந்திர மண்டலம்)
  • கண்ட மாலை
  • கோடிப்பாளை
  • கண்ணாடிப் பட்டம்
  • மகா பத்மம் 
  • மகா நாசி 
  • அனு நாசி

வேதி

கபோதம் (கோபனகா)
அல்ப நாசி
நேத்ர நாசி
கொடிக்கருக்கு - கோடிப்பாளை, மையப்பாளை
சந்திரமண்டலம்
கொடுங்கை
சாத்யம் - ஸ்வஸ்திகம், நந்தியாவர்த்தம், அர்த்தமானம், சர்வதோபத்ரம்


உபபீடம்
காஸ்யபம்
  1. மூவங்க (திரியங்க) உபபீடம் 
  2. ஐந்து அங்க (பஞ்சாங்க) உபபீடம் 
  3. ஆறு அங்க (ஷடாங்க) உபபீடம் 
  4. எட்டு அங்க (அஷ்டாங்க) உபபீடம் 
  5. பிரதிபத்ர உபபீடம் 
  6. பிரதிசுந்தர உபபீடம் - 2 பிரதி
  7. சௌபத்ர உபபீடம் - கபோதம், பட்டிகை
  8. கல்யாண காரிகை உபபீடம் - இரண்டு பட்டிகை
மானசாரம்
வேதிபத்ரம்
1- ஷடாங்கம்
2, 3 - அஷ்டாங்கம்
(9) 4 - உபானம், பத்மத்தின் மீது பிரதிவரி. அதன் மேல் கண்டம், கம்பு, பட்டிகை, கம்பு
பிரதிபத்ரம்
1 - காஸ்யப பிரதிபத்ரம் போன்றது
(10) 2 - + கண்டத்தின் கீழே ஒரு பட்டிகை, அத்ன கீழே ஒரு கண்டம் கூடுதல் சிற்றுருப்புகள்
(11, 12)3, 4 - 2 ஐப் போல. பட்டிகைக்குப் பதில் 3 இல் வஜ்ர கும்பம், 4 இல் ரத்ன பட்டம்
மஞ்ச பத்ரம்
(13,14,15,16) பிரதிபத்ரத்தில் கீழே இரண்டாவது கபோதமும் அதன் கீழ் இரண்டாவது சிறிய கண்டமும்
3 - உபானத்தின் மேல் பட்டிகை, இடையில் கண்டம்
4 - கீழ் கண்டம் > மேல் கண்டம்

திருநாவுக்கரசர் கோயில் வகைகள்
  1. கரக்கோயில்
  2. ஞாழற்கோயில்
  3. கொகுடிக்கோயில்
  4. இளங்கோயில்
  5. மணிக்கோயில்
  6. ஆலக்கோயில்
  7. பெருங்கோயில்

துவிதல விமான பேதம்

1விபுல சுந்தரம்ஏறு சாலை
2கைலாசம்இறங்கு சாலை
3ஸ்வஸ்திகம்சதுரஸ்ர நாகரம்
4ஸ்வஸ்தி பத்ரம்சதுரஸ்ர நாகரம்
5ஸ்வஸ்தி பெந்தம்சதுரஸ்ர நாகரம்
6மங்களம்ஆயத்த நாகரம்
7காந்தாரம்ஆயத்த நாகரத்தை ஆயத்த வேசரமாக அமைத்த விமானம்.
8ருத்ரகாந்தம்கலப்பு விருத்தம்
9பர்வதம்கலப்பு விருத்தம்
10ஹஸ்தி பிருஷ்டம்கஜபிருஷ்டம்
11விஷ்ணுகாந்தம்கலப்பு 8 பட்டை
12குபேரகாந்தம்ஆறுபட்டை
13ஸ்ரீகரம்
14கல்யாண சுந்தரம்
15மனோகரம்
16விருத்த கிரஹம்


ஏக தல விமான பேதம்

1ஸ்ரீவிஜயம்கலப்பு விருத்தம்
2ஸ்ரீபோகம்கலப்பு விருத்தம் + 4 கர்ண கூடம்
3ஸ்ரீபத்ரம்கலப்பு விருத்தம் + 4 கர்ண கூடம் + பத்தி
4ஸ்ரீவிசாலம்கலப்பு விருத்தம் + 4 கர்ண கூடம் + மத்ய பத்ரம்
5விருத்த கேசரம்கலப்பு விருத்தம் + அகண்ட மகா நாசி, கிரீவ கோட்டம்
6ஸ்ரீகரம்சதுரஸ்ரம்
7ஸ்ரீகண்டம்சதுரஸ்ரம் = சிகரத்தில் 8 அல்ப நாசி
8ஹஸ்திபிருஷ்டம்கஜ பிருஷ்டம்
9கோசலைகலப்பு ஆயத்த விருத்தம் + இரு பக்கங்களில் லலாட நாசி + முன் பின் பத்ர நாசி
10கலயாண சுந்தரம்கலப்பு ஆயத்த விருத்தம்+ 4 மகா நாசி
11ஸ்கந்த காந்தம்கலப்பு 6 பட்டை
12ஸ்வஸ்திபந்தம்கலப்பு 8 பட்டை
13ராஜகேசரம்கலப்பு 8 பட்டை, மற்றபடி விருத்த கேசரம் போல
14மத்யபத்ரம்மகா நாசியின் நீளம் அகலத்திற்கு சமம்


அஷ்டாங்க விமானம் 









கோயில்களின் தோற்றம்

 இன்னும் எழுதப்படவில்லை.

ஆகம, சிற்பக் கட்டடக் கலை நூல்கள்

ஆகமங்கள் என்பன மனிதர்கள் இறைவனை உணர்ந்து நிறைவு (வீடுபேறு, முக்தி) அடைவதற்கான வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் நூல்கள். அவை மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கியவை.

பெயர்ப் பொருள்
  • ஆகமம் (தமிழ்ச் சொல்லாக) = ஆ + கமம். ஆ - ஆன்மா, சைவ சித்தாந்தத்தில் பசு. கமம் - நிறைவு. 'ஆகமம்' என்ற சொல் உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதலை குறிக்கும்.  இது சைவ சித்தாந்தத்தின் படியான விளக்கமும் ஆகும்.
  • ஆகமம் (வடமொழி சொல்லாக) = ஆ-அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம் - போதலை உணர்த்தும் வினையடி), ‘போய்ச் சேர்தல்’, ‘வந்தடைதல்’ என்னும் பொருளைத் தருவது. 
  • ஆகமம் என்பதற்கு “தொன்று தொட்டு வரும் அறிவு” என்றும் “இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்” என்றும் அறிஞர் பொருள் கூறுவர்.

வகைகள்

சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம் ஆகிய சமயங்களுக்கு தனித்தனியே ஆகமங்கள் உள்ளன. ஆகமங்கள் சிறப்பாக சைவ ஆகமங்களையே குறிக்கும் என்ற கருத்தும் உள்ளது. வைணவ ஆகமங்களுக்கு 'சம்ஹிதைகள்' என்றும் சாக்த ஆகமங்களுக்கு 'தந்திரங்கள்' என்றும் பெயர். 

ஆகமங்கள் தென்னிந்தியாவைச் சார்ந்தவை. இவை வட மொழியில் அமைந்தவை. ஆனால், கிரந்த வரிவடிவத்தில் மட்டுமே எழுதப்பட்டவை,  (கிரந்தம் - வடமொழியை எழுத தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வரிவடிவம்).

ஆகமங்கள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவற்றின் மூல தத்துவம் ஆகமங்களிலேயே உள்ளடங்கி உள்ளது. ஆனால், அவை வேதங்களை மறுப்பதும் இல்லை.

அமைப்பு முறை

ஆகமங்கள் 4 பாதங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
  1. சரியை - தினசரி வாழ்வில் கடைப்டிக்கவேண்டிய நெறிமுறைகள்
  2. கிரியை - கோயில்களை எழுப்பும் முறைகள், வழிபாட்டு நெறிமுறைகள்
  3. யோகம் - பிராணாயாமம், தியானம் போன்ற யோக முறைகள்
  4. ஞானம் - தத்துவம் (சித்தாந்தம்)
கிரியை பாதத்தில் உள்ள கோயில் கட்டடக்கலை சார்ந்த நெறிகளை வாஸ்து, சிற்ப சாஸ்திர நூல்கள் பின்பற்றியுள்ளன. சான்றாக, சைவ ஆகமமாகிய காமிகாமத்தின் கிரியா பாதத்தில் உள்ள சுலோகங்களை வாஸ்து சிற்ப முதல் நூலாகிய 'மயமதம்' எடுத்தாண்டுள்ளது.

சைவ ஆகமங்கள்

மூல ஆகமங்கள் - 28
உப ஆகமங்கள் - 207

சைவ ஆகமங்கள் சிவனால்  தன் ஐந்து முகங்களில் இருந்து ஐந்து முனிவர்களுக்கு அருளப்பட்டவை என்பது சைவர்கள் நம்பிக்கை. சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகிய முகங்களில் இருந்து முறையே 5,5,5,5,8 ஆகமங்கள்.

ஐந்து முக லிங்கம் - வழித்துணை நாதர் கோயில், விரிஞ்சிபுரம்

“ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்”
“மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித் தருளியும்”
                    - மாணிக்கவாசகர்

“சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே”
“தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றானே”
"நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே"
                    - திருமூலர்

திருமூலர் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். எனவே முதல் ஆகமங்கள் அதற்கு முற்பட்டவை. இது கொண்டு அப்போது வழக்கிலிருந்த செங்கற் தளிகளும் ஆகமங்களைப் பின்பற்றி இருக்க வேண்டும்.

28 ஆகமங்களில் கிடைத்துள்ளவை சிலவே.
  1. காமிகம் 
  2. காரணம் 
  3. மகுடம் 
  4. தீப்தம் 
  5. சுப்ர பேதம் 
  6. அஜிதம் 
  7. அம்சுமதம்  
உள்ளடக்க செய்யுள்களின் எண்ணிக்கையை ஆகமங்களின் துவக்கத்தில் தரப்பட்டுள்ளன. அதன்படி சிலவே முழுமையாக கிடைத்துள்ளன.

தமிழகத்து கோயில்கள் எதாவது ஒரு ஆகமத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவை. தஞ்சை பெரிய கோயில் மகுடாகமத்தை பின்பற்றி அமைக்கப்பட்டது. கட்டும்போது மட்டும் அல்ல, வழிபாடு முதலிய அனைத்து கோயில் நடைமுறைகளிலும் அதே ஆகமம் பின்பற்றப்படும். கோயிலாகிய உடல், அதன் இயக்கம், அதன் உயிராகிய இறைவன் மூன்றும் ஒருங்கிணைந்து வழிபடுவோருக்குப் பலன் தர ஆகமங்கள் வழிகாட்டுகின்றன.

வைணவ ஆகமங்கள் 

வைணவ ஆகமங்கள் இரண்டு:
  • பாஞ்சராத்ரம்,
  • வைகானசம்.
இவை திருமால் மனித உருவெடுத்து முனிவர்களுக்கு அருளியவை என்பது வைணவர்கள் நம்பிக்கை.
  • பாஞ்சராத்ரம் ஐந்து இரவுகளில் சாண்டில்ய முனிவர்க்கு அருளப்பட்டது, அதனால் அப்பெயர் பெற்றது. 
  • வைகானஸம், திருமால் வைகானச முனிவராகத் தோன்றி பிரம்மாவின் மன மகன்கள் (மானஸ புத்திரர்கள்) ஆன சனகர் முதலான நால்வருக்கு அருளியது. 
இவை தவிர நூற்றுக்கும் அதிகமான உப ஆகமங்களும் வைணவத்தில் உண்டு.

வைகானசர்- நெடுங்குணம் யோக ராமர் கோயில்
வைணவ தட்சிணாமூர்த்தி

திருமலை கோவில் வைகானசத்தின் படியும், திருவரங்கம் பாஞ்ராத்ரத்தின் படியும் இயங்குகிறன.

ராமானுஜர் பாஞ்சராத்திரத்தை வேதத்துக்கு இணையாகக் கருதினார். பாஞ்சராத்திர ஆகம விதிகள் திருவிலச்சினை முதலிய பஞ்ச சம்ஸ்கார தீட்சை பெற்ற பிராமணர் அல்லாதவர்களையும் சில கோயில் பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது. கிராமப்புறப் பெருமாள் கோயில்களில் ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் இதர சமுகத்தை சேர்ந்தவர்கள் பூசை செய்து வருகின்றனர். பாஞ்சராத்திர முறையில் மந்திரங்களுடன், தந்திரங்களும் முத்திரைகளும், சடங்குகளில் முக்கிய இடம் பெறுகின்றன.

வைகானச ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே முக்கிய சடங்குகளில் அனுமதிக்கின்றன. வழிபாட்டின்போது தூப தீபங்கள் காட்டுவதிலும் வரிசை முறை வேறுபடுகின்றது. வைணவ தீட்சையான திருவிலச்சினையை வலியுறுத்தும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு பாஞ்சராத்திரம் அணுக்கமானது.

கோயில் கட்டட, சிற்பக் கலை நூல்கள் (வாஸ்து நூல்கள்)

கோயில் கட்டட, சிற்பக் கலை நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே உள்ளன. ஆனால், இவை  தமிழகத்துக்கு உரிய கிரந்த வரிவடிவத்திலேயே எழுதப்பட்டுள்ளன. பல தமிழ் கலைச் சொற்களும் அவற்றில் உள்ளன. இவை வட மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் விளக்கப்படுவது தமிழ் நாட்டுக் கலைதான். 

கட்டட, சிற்பக் கலை  முதல் ஆசிரியன் மயன். மயனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. மயன் எழுதிய நூல் 'மயமதம்'. மயமதம் ஒரு தெளிவான, குழப்பமில்லாத கட்டட, சிற்பக்கலை நூல். 36 அதிகாரங்கள் 3300 பாடல்களைக் கொண்டது. சைவ நூல்களுள் ஒன்று. காமிகாகமத்தின் பூர்வ பகுதியில் உள்ள கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை சார்ந்த பாடல்கள் பல இதிலும் உள்ளன. சிற்பப் பகுதியில் சிவ, லிங்க உருவங்களுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. இதன் ஓலைச்சுவடிகள் கிரந்தம், தெலுங்கு அல்லது மலையாளத்தில் கிடைக்கின்றன. சோழர்கள், கங்கர்கள், நுளம்பர்கள் இதைப் பின்பற்றினர். இவர்களைத் தவிர சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், கம்போடியாவின் கெமர் அரசர்கள் ஆகியோரும் இதை பின்பற்றினர்.. பொ. ஆ. 7-8 ஆம் நூற்றாண்டிலேயே வழக்கில் இருநதாலும், பொ. ஆ. 11-12 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் தொகுக்கப்பட்டது. கேரளாவிலும் கர்நாடகத்திலும் பொ.ஆ. 10-11 ஆம் நூற்றண்டு வரை மயமதம் பயன்பாட்டில் இருந்தது. அதன் பிறகு அங்கே அவை தனித்துவமான கட்டடக்கலைகள் அறிமுகமாகியன 13-14 ஆம் நூற்றாண்டு தமிழ் மொழிபெயர்ப்பு தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ளது.

பின்னர் வெவ்வேறு காலங்களில் பலர் கட்டட, சிற்பக் கலை  நூல்களை யாத்துள்ளனர். மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் 32 நூல்களின் பட்டியலைத் தருகிறது. மனுசாரம் என்ற சிற்ப கட்டடக்கலை நூல் 28 நூல்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது. அவற்றில் 18 மானசார நூற் பட்டியலில் இல்லாதவை. ஆக இவ்வாறு அறியப்பட்ட 50 நூல்களில் தற்போது கீழ்கண்ட 6 நூல்களே உள்ளன. 
  1. மயமதம் 
  2. விஸ்வகர்மீயம் 
  3. மானசாரம் 
  4. ஐந்திர மதம் 
  5. மனுசாரம் 
  6. காஸ்யபம் 
இவை சிற்பக்கலை, கட்டடக்கலை இரண்டையும் விவரிக்கும் முழு நூல்கள். வாஸ்து சாஸ்திரம்  என்றும் இவற்றை அழைப்பர். 

11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காஸ்யபம் கோயில் கட்டடக் கலை பற்றிய விரிவான விவரணைகளை அளிக்கிறது. மானசாரம் 14 நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால நூல். 

மேலும், 'வாஸ்துவித்யை', 'மனுஷ்யாலயச் சந்திரிகை' என்னும் இரு சிறந்த மனை நூல்கள் உள்ளன.

இவை தவிர, 'சாரஸ்வதீயம்', 'பிராம்மீயம்', 'சகளாதிகாரம்' என்னும் மூன்று முற்றிலும் சிற்பக் கலை பற்றி பேசும் நூல்கள் உள்ளன. அவை கட்டடக்கலை, மனை பற்றி பேசும் வாஸ்து நூல்கள் அல்ல.

'சில்பரத்தினம்'எனும் பிற்கால சிறு வாஸ்து நூல் மயமதம், காஸ்யபம் ஆகிய இரு நூல்களின் கொள்கைகளைச் சுருக்கமாகச் சொல்கிறது.

'நாராயணீயம்', 'சித்ரபாகுல்யம்' ஆகிய இரு நூல்களின் சில அத்தியாயங்களே கிடைக்கின்றன.

'சர்வார்த்த சிற்ப சிந்தாமணி', 'சிற்ப ரத்தினாகரம்' இரண்டும் தமிழிலான மனை நூல்களாகும். 

கூடுதலாக

28 சைவ ஆகமங்கள் சிவனின் வெவ்வேறு உறுப்புகளில் இருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றன. 1. காமிகம் – திருவடிகள்; 2. யோகஜம் – கணைக்கால்கள்; 3. சிந்தியம் – கால்விரல்கள்; 4. காரணம் – கெண்டைக் கால்கள்; 5. அஜிதம் – முழந்தாள்; 6. தீப்தம் – தொடைகள்; 7. சூக்ஷ்மம் – குய்யம்; 8. ஸ்ஹஸ்ரம் – இடுப்பு; 9. அம்சுமதம்/அம்சுமான் – முதுகு; 10. சுப்ரபேதம் – தொப்புள்; 11. விஜயம் – வயிறு; 12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் – நாசி: 13. ஸ்வயம்புவம்/ஸ்வாயம்புவம் – முலை; 14. அனலம் /க்னேயம் – கண்கள்; 15. வீரபத்ரம்/வீரம் – கழுத்து; 16. ரௌரவம் – காதுகள்; 17. மகுடம் – திருமுடி; 18. விமலம் – கைகள், 19. சந்திரஞானம் – மார்பு; 20. பிம்பம் – முகம்; 21. புரோத்கீதம் – நாக்கு; 22. லளிதம் – கன்னங்கள்; 23. சித்தம் – நெற்றி; 24. சந்தானம் – குண்டலம்; 25. சர்வோக்தம்/ஸர்வோத்தம் – உபவீதம்; 26. பரமேஸ்வரம்/பரமேசுரம் – மாலை; 27. கிரணம் – இரத்தினா பரணம்; 28. வாதுளம் – ஆடை.


உதவி


கணபதி ஸ்தபதி வை; சிற்பச் செந்நூல்; 3 ஆம் வெளியீடு; 2001

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021



கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...