Saturday, 10 September 2022

உள்ளடக்கம்

திராவிடக் கட்டடக்கலை - அடிப்படைகள்

பொது

பித்தி
பிரஸ்தரம்


கோயில் வளாகம்


திராவிடக் கட்டடக்கலை - மேலும் 


திராவிடக் கட்டடக்கலை - சிறப்புப் பகுதி






கலைச்சொல் பட்டியல்

கோட்ட பஞ்சரம்

  • கோட்டம் / தேவ கோட்டம்
  • நகுல பாதம் / அணைவுத் தூண்கள்
  • மேலே உத்திரம், வாஜனம், வலபி போன்ற கூரை
  • மேலே தோரணம் அல்லது 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சாலாகார விமான அமைப்பு

நாசி, நாசிகை, கூடு
  • காடம்
  • தோரணப்பட்டி
  • சிகை
  • சிம்ம வக்ரம்
  • அல்ப நாசி
  • ஷூத்ர நாசி
  • பால நாசி
  • மகா நாசி
  • அனு நாசி
  • லலாட நாசி / குக்ஷி நாசி
  • சுக நாசி
  • வம்ச நாசி
  • நேத்ர நாசி

தோரணம்
  • காடம்
  • தோரணப்பட்டி
  • சிகை
  1. பித்தி தோரணம் / குட்ய தோரணம்
  2. துவார தோரணம் / வாயில் தோரணம்
  3. ஸ்தம்ப தோரணம்
  1. பத்ர தோரணம்
  2. மகர தோரணம்
  3. சித்ர தோரணம்

பஞ்சரம்
  • இரட்டைக்கால் பஞ்சரம்
  • ஒற்றைக்கால் பஞ்சரம் / விருத்த ஸ்புடிதம் - பத்மாசனம் (அஸ்வ பாதம்), கும்பம், வாய் (ஆஸ்யம்), தாடி, குடம், பலகை, பிரஸ்தரம், கர்ண கூடம் முதலியன. மேற் பகுதியில் பூரிமம், கூடம், தூங்கானை விமானம், சாலை விமானம், அல்லது சுக நாசி. உடல் வட்டமாக மட்டும் இன்றி சதுரம், எண்பட்டை, பத்திருப்பு.
  • கும்ப பஞ்சரம் / கும்ப லதா
  • கபோத பஞ்சரம்
  • நிஷ்கராந்த பஞ்சரம்

ஜாலகம்
  • கோநேத்திரம் (கவக்சா)
  • ஹஸ்தி நேத்திரம் (குஞ்சரக்சா)
  • நந்தியாவர்த்தம்
  • ருஜிக்ரியம்
  • அப்ஜவர்த்தம்
  • புஷ்பகரணம்
  • சமகர்ணம்
  • வல்லி மண்டலம்
  • ஸ்வஸ்திகம்
  • வட்டம்

பிரநாளம் / கோமுகை
நிர்மாலயம் / நிர்மால்ய நீர்
திசை
இடம்
பாத்திரம்
நிர்மால்ய துவாரம்
முகம்
நாளம் / அம்பு மார்க்கம்
லிங்க வடம்
பூமுனை
தாங்கி

துவாரம் (வாயில்)
புவங்கம்
பதங்கம்
நிலைக்கால் / ஸ்தம்ப யோகம்
சாகா - வல்லி, பத்ம, இரத்தின, நாக
நாகபந்தம்
லலாட பட்டம்
சுத்த துவாரம்


சோபானம்
சந்திர சிலா
பலகா
ஹஸ்தம் - கஜ / ஹஸ்தி, வியாழ
யஷ்டி - துதி யாளி, ஹஸ்தி யாளி
திரிகண்ட சோபானம்
பக்ஷ சிலா
அர்த்த கோமுத்ர
சங்க மண்டலம்
வல்லி மண்டலம்


பிரஸ்தரம்
மற்றப் பெயர்கள் - விதானம், விடாணம், மத்தவாரணம், கோபானம், பிரச்சாதனம், கபோதகம், வலபி, லுபம் 

உத்தரம்
  • உத்தரம் - கண்டோத்ரம், பத்ர பந்தம், ரூபோத்ரம்
  • கம்பு/ வாஜனம்
  • வலபி/ எழுதகம் / பூத மாலை/ பூதமாலோநதம் - பூதங்கள், அன்னங்கள் (ஹம்சம்), புறாக்கள், ஊர்த்துவ பத்மம்), மதலை 
  • வாஜனம்
கபோதம்
வியாழம் / பூமி தேசம் - ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாஜனம்

கோண பட்டம்
சதுர பட்டம்


பித்தி / பாத வர்க்கம்
  • வேதி (தனி)
  • தூண்கள் (தனி)
  • பத்திகள்
  • கோட்டங்கள் (தனி)
  • பஞ்சரங்கள் (தனி)
குட்ய ஸ்தம்பம் / அரைத் தூண்
ஜஷால   ஸ்தம்பம் 
நிகாத ஸ்தம்பம் (நிகாந்தரி)

பத்தி - சாலை, கர்ண, பஞ்சர, 
அகாரை
பத்ரம் - சம பத்ரம், சுபத்ரம், உபபத்ரம்
சாலாந்தரம்

பித்தி - பாஹ்ய, அந்தர
அலிந்தம்
சாந்தாரம்
நிராந்தரம்

ஊர்த்துவ ஜங்கா, அதோ ஜங்கா


தூண்
ஸ்தம்பம், கால், பாதம், கம்பம்

  • ஓமா
  • உடல்
  • மாலைத்தொங்கல்
  • மாலாஸ்தானம்
  • தாமரைக்கட்டு
  • கலசம் / லசூனா
  • தாடி
  • கும்பம் / அமலகம்
  • மண்டி -  பாலி,  பத்ம மண்டி, நாகதலை மண்டி
  • பலகை
  • வீர கண்டம்  / சிகை / சிகா

மேல் உறுப்புகள் இருந்தால்
  • பிரம்ம காந்தம் 4
  • விஷ்ணு காந்தம் 8
  • இந்திர காந்தம் / ஸ்கந்த காந்தம் 6
  • சந்திர காந்தம் / சௌமிய காந்தம் 16
  • ருத்ர காந்தம்
  • பத்ர காந்தம்
மேல் உறுப்புகள் இல்லாவிட்டால்
  • ஸ்ரீ ருத்ர காந்தம்
  • மத்ய ருத்ர காந்தம்
  • சிவகாந்தம்
  • பூர்வஸ்ரம்
  • பெயரில்லா வகைகள் - சதுரம், 16 பட்டை
சித்ர கண்டத் தூண் - ஸ்ரீகண்டம் (8 பட்டை), ஸ்ரீவஜ்ரம் (16)
பிண்டி பாதம்
ஸ்ம்யுக்த தூண்

பாத வகைகள்
  • சிம்ம பாதம்
  • யாழி பாதம்
  • இப பாதம்
  • பூத பாதம்
  • பித்தி தூண்கள்
  • மண்டபத் தூண்கள்
  • தோரணத் தூண்கள்
  • தனித் தூண்கள்
நாகபந்தம்
புஷ்ப பந்தம்
பூதம் 

தாரு ஸ்தம்பம் 

ஹாரம்

ஹாராந்தரம்
  1. கர்ண கூடம் 
  2. சாலை 
  3. பஞ்சரம் 
நாசி கோஷ்டம்
நேத்ர கோஷ்டம்
ஹர்மியம் / அரமியம் /கிரக பிண்டி

அர்பிதம்
அனர்பிதம்
அலிந்தம்

ஏறு சாலை
இறங்கு சாலை

பத்ரம்
பத்ர சாலை
சுபத்ரம் 
உப பத்ரம் 

சொறுவு சாலை
முக சாலை

4 அங்கம் - வேதி, பித்தி, சிகரம், ஸ்தூபி
6 அங்கம் - வேதி, பித்தி, பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி

அந்த்ர பிரஸ்தரம்
ஷூத்ர நசி
பார வாஹகா / விமானம் தாங்கிகள்
கதலிகா கர்ணம்
கண்ட ஹர்மியம்
சாலாஹாரம்


ஸ்தூபி
  • பத்மம்
  • குடம்
  • பாலிகாநாளம்
  • குட்மலம்
  • ஸ்தூபித் தண்டு

கிரீவம் / கண்டம் / கர்ணம் / களம்
  • வேதி
  • கிரீவம் 
  • கிரீவ கோஷ்டங்கள்
  • வலபி

சிகரம் / சிரம் / மஸ்தகம் / பண்டிகை
  • ஓஷ்டம் (அதில் சந்திர மண்டலம்)
  • கண்ட மாலை
  • கோடிப்பாளை
  • கண்ணாடிப் பட்டம்
  • மகா பத்மம் 
  • மகா நாசி 
  • அனு நாசி

வேதி

கபோதம் (கோபனகா)
அல்ப நாசி
நேத்ர நாசி
கொடிக்கருக்கு - கோடிப்பாளை, மையப்பாளை
சந்திரமண்டலம்
கொடுங்கை
சாத்யம் - ஸ்வஸ்திகம், நந்தியாவர்த்தம், அர்த்தமானம், சர்வதோபத்ரம்


உபபீடம்
காஸ்யபம்
  1. மூவங்க (திரியங்க) உபபீடம் 
  2. ஐந்து அங்க (பஞ்சாங்க) உபபீடம் 
  3. ஆறு அங்க (ஷடாங்க) உபபீடம் 
  4. எட்டு அங்க (அஷ்டாங்க) உபபீடம் 
  5. பிரதிபத்ர உபபீடம் 
  6. பிரதிசுந்தர உபபீடம் - 2 பிரதி
  7. சௌபத்ர உபபீடம் - கபோதம், பட்டிகை
  8. கல்யாண காரிகை உபபீடம் - இரண்டு பட்டிகை
மானசாரம்
வேதிபத்ரம்
1- ஷடாங்கம்
2, 3 - அஷ்டாங்கம்
(9) 4 - உபானம், பத்மத்தின் மீது பிரதிவரி. அதன் மேல் கண்டம், கம்பு, பட்டிகை, கம்பு
பிரதிபத்ரம்
1 - காஸ்யப பிரதிபத்ரம் போன்றது
(10) 2 - + கண்டத்தின் கீழே ஒரு பட்டிகை, அத்ன கீழே ஒரு கண்டம் கூடுதல் சிற்றுருப்புகள்
(11, 12)3, 4 - 2 ஐப் போல. பட்டிகைக்குப் பதில் 3 இல் வஜ்ர கும்பம், 4 இல் ரத்ன பட்டம்
மஞ்ச பத்ரம்
(13,14,15,16) பிரதிபத்ரத்தில் கீழே இரண்டாவது கபோதமும் அதன் கீழ் இரண்டாவது சிறிய கண்டமும்
3 - உபானத்தின் மேல் பட்டிகை, இடையில் கண்டம்
4 - கீழ் கண்டம் > மேல் கண்டம்

திருநாவுக்கரசர் கோயில் வகைகள்
  1. கரக்கோயில்
  2. ஞாழற்கோயில்
  3. கொகுடிக்கோயில்
  4. இளங்கோயில்
  5. மணிக்கோயில்
  6. ஆலக்கோயில்
  7. பெருங்கோயில்

துவிதல விமான பேதம்

1விபுல சுந்தரம்ஏறு சாலை
2கைலாசம்இறங்கு சாலை
3ஸ்வஸ்திகம்சதுரஸ்ர நாகரம்
4ஸ்வஸ்தி பத்ரம்சதுரஸ்ர நாகரம்
5ஸ்வஸ்தி பெந்தம்சதுரஸ்ர நாகரம்
6மங்களம்ஆயத்த நாகரம்
7காந்தாரம்ஆயத்த நாகரத்தை ஆயத்த வேசரமாக அமைத்த விமானம்.
8ருத்ரகாந்தம்கலப்பு விருத்தம்
9பர்வதம்கலப்பு விருத்தம்
10ஹஸ்தி பிருஷ்டம்கஜபிருஷ்டம்
11விஷ்ணுகாந்தம்கலப்பு 8 பட்டை
12குபேரகாந்தம்ஆறுபட்டை
13ஸ்ரீகரம்
14கல்யாண சுந்தரம்
15மனோகரம்
16விருத்த கிரஹம்


ஏக தல விமான பேதம்

1ஸ்ரீவிஜயம்கலப்பு விருத்தம்
2ஸ்ரீபோகம்கலப்பு விருத்தம் + 4 கர்ண கூடம்
3ஸ்ரீபத்ரம்கலப்பு விருத்தம் + 4 கர்ண கூடம் + பத்தி
4ஸ்ரீவிசாலம்கலப்பு விருத்தம் + 4 கர்ண கூடம் + மத்ய பத்ரம்
5விருத்த கேசரம்கலப்பு விருத்தம் + அகண்ட மகா நாசி, கிரீவ கோட்டம்
6ஸ்ரீகரம்சதுரஸ்ரம்
7ஸ்ரீகண்டம்சதுரஸ்ரம் = சிகரத்தில் 8 அல்ப நாசி
8ஹஸ்திபிருஷ்டம்கஜ பிருஷ்டம்
9கோசலைகலப்பு ஆயத்த விருத்தம் + இரு பக்கங்களில் லலாட நாசி + முன் பின் பத்ர நாசி
10கலயாண சுந்தரம்கலப்பு ஆயத்த விருத்தம்+ 4 மகா நாசி
11ஸ்கந்த காந்தம்கலப்பு 6 பட்டை
12ஸ்வஸ்திபந்தம்கலப்பு 8 பட்டை
13ராஜகேசரம்கலப்பு 8 பட்டை, மற்றபடி விருத்த கேசரம் போல
14மத்யபத்ரம்மகா நாசியின் நீளம் அகலத்திற்கு சமம்


அஷ்டாங்க விமானம் 









கோயில்களின் தோற்றம்

 இன்னும் எழுதப்படவில்லை.

ஆகம, சிற்பக் கட்டடக் கலை நூல்கள்

ஆகமங்கள் என்பன மனிதர்கள் இறைவனை உணர்ந்து நிறைவு (வீடுபேறு, முக்தி) அடைவதற்கான வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் நூல்கள். அவை மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கியவை.

பெயர்ப் பொருள்
  • ஆகமம் (தமிழ்ச் சொல்லாக) = ஆ + கமம். ஆ - ஆன்மா, சைவ சித்தாந்தத்தில் பசு. கமம் - நிறைவு. 'ஆகமம்' என்ற சொல் உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதலை குறிக்கும்.  இது சைவ சித்தாந்தத்தின் படியான விளக்கமும் ஆகும்.
  • ஆகமம் (வடமொழி சொல்லாக) = ஆ-அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம் - போதலை உணர்த்தும் வினையடி), ‘போய்ச் சேர்தல்’, ‘வந்தடைதல்’ என்னும் பொருளைத் தருவது. 
  • ஆகமம் என்பதற்கு “தொன்று தொட்டு வரும் அறிவு” என்றும் “இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்” என்றும் அறிஞர் பொருள் கூறுவர்.

வகைகள்

சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம் ஆகிய சமயங்களுக்கு தனித்தனியே ஆகமங்கள் உள்ளன. ஆகமங்கள் சிறப்பாக சைவ ஆகமங்களையே குறிக்கும் என்ற கருத்தும் உள்ளது. வைணவ ஆகமங்களுக்கு 'சம்ஹிதைகள்' என்றும் சாக்த ஆகமங்களுக்கு 'தந்திரங்கள்' என்றும் பெயர். 

ஆகமங்கள் தென்னிந்தியாவைச் சார்ந்தவை. இவை வட மொழியில் அமைந்தவை. ஆனால், கிரந்த வரிவடிவத்தில் மட்டுமே எழுதப்பட்டவை,  (கிரந்தம் - வடமொழியை எழுத தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வரிவடிவம்).

ஆகமங்கள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவற்றின் மூல தத்துவம் ஆகமங்களிலேயே உள்ளடங்கி உள்ளது. ஆனால், அவை வேதங்களை மறுப்பதும் இல்லை.

அமைப்பு முறை

ஆகமங்கள் 4 பாதங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
  1. சரியை - தினசரி வாழ்வில் கடைப்டிக்கவேண்டிய நெறிமுறைகள்
  2. கிரியை - கோயில்களை எழுப்பும் முறைகள், வழிபாட்டு நெறிமுறைகள்
  3. யோகம் - பிராணாயாமம், தியானம் போன்ற யோக முறைகள்
  4. ஞானம் - தத்துவம் (சித்தாந்தம்)
கிரியை பாதத்தில் உள்ள கோயில் கட்டடக்கலை சார்ந்த நெறிகளை வாஸ்து, சிற்ப சாஸ்திர நூல்கள் பின்பற்றியுள்ளன. சான்றாக, சைவ ஆகமமாகிய காமிகாமத்தின் கிரியா பாதத்தில் உள்ள சுலோகங்களை வாஸ்து சிற்ப முதல் நூலாகிய 'மயமதம்' எடுத்தாண்டுள்ளது.

சைவ ஆகமங்கள்

மூல ஆகமங்கள் - 28
உப ஆகமங்கள் - 207

சைவ ஆகமங்கள் சிவனால்  தன் ஐந்து முகங்களில் இருந்து ஐந்து முனிவர்களுக்கு அருளப்பட்டவை என்பது சைவர்கள் நம்பிக்கை. சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகிய முகங்களில் இருந்து முறையே 5,5,5,5,8 ஆகமங்கள்.

ஐந்து முக லிங்கம் - வழித்துணை நாதர் கோயில், விரிஞ்சிபுரம்

“ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்”
“மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித் தருளியும்”
                    - மாணிக்கவாசகர்

“சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே”
“தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றானே”
"நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே"
                    - திருமூலர்

திருமூலர் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். எனவே முதல் ஆகமங்கள் அதற்கு முற்பட்டவை. இது கொண்டு அப்போது வழக்கிலிருந்த செங்கற் தளிகளும் ஆகமங்களைப் பின்பற்றி இருக்க வேண்டும்.

28 ஆகமங்களில் கிடைத்துள்ளவை சிலவே.
  1. காமிகம் 
  2. காரணம் 
  3. மகுடம் 
  4. தீப்தம் 
  5. சுப்ர பேதம் 
  6. அஜிதம் 
  7. அம்சுமதம்  
உள்ளடக்க செய்யுள்களின் எண்ணிக்கையை ஆகமங்களின் துவக்கத்தில் தரப்பட்டுள்ளன. அதன்படி சிலவே முழுமையாக கிடைத்துள்ளன.

தமிழகத்து கோயில்கள் எதாவது ஒரு ஆகமத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவை. தஞ்சை பெரிய கோயில் மகுடாகமத்தை பின்பற்றி அமைக்கப்பட்டது. கட்டும்போது மட்டும் அல்ல, வழிபாடு முதலிய அனைத்து கோயில் நடைமுறைகளிலும் அதே ஆகமம் பின்பற்றப்படும். கோயிலாகிய உடல், அதன் இயக்கம், அதன் உயிராகிய இறைவன் மூன்றும் ஒருங்கிணைந்து வழிபடுவோருக்குப் பலன் தர ஆகமங்கள் வழிகாட்டுகின்றன.

வைணவ ஆகமங்கள் 

வைணவ ஆகமங்கள் இரண்டு:
  • பாஞ்சராத்ரம்,
  • வைகானசம்.
இவை திருமால் மனித உருவெடுத்து முனிவர்களுக்கு அருளியவை என்பது வைணவர்கள் நம்பிக்கை.
  • பாஞ்சராத்ரம் ஐந்து இரவுகளில் சாண்டில்ய முனிவர்க்கு அருளப்பட்டது, அதனால் அப்பெயர் பெற்றது. 
  • வைகானஸம், திருமால் வைகானச முனிவராகத் தோன்றி பிரம்மாவின் மன மகன்கள் (மானஸ புத்திரர்கள்) ஆன சனகர் முதலான நால்வருக்கு அருளியது. 
இவை தவிர நூற்றுக்கும் அதிகமான உப ஆகமங்களும் வைணவத்தில் உண்டு.

வைகானசர்- நெடுங்குணம் யோக ராமர் கோயில்
வைணவ தட்சிணாமூர்த்தி

திருமலை கோவில் வைகானசத்தின் படியும், திருவரங்கம் பாஞ்ராத்ரத்தின் படியும் இயங்குகிறன.

ராமானுஜர் பாஞ்சராத்திரத்தை வேதத்துக்கு இணையாகக் கருதினார். பாஞ்சராத்திர ஆகம விதிகள் திருவிலச்சினை முதலிய பஞ்ச சம்ஸ்கார தீட்சை பெற்ற பிராமணர் அல்லாதவர்களையும் சில கோயில் பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது. கிராமப்புறப் பெருமாள் கோயில்களில் ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் இதர சமுகத்தை சேர்ந்தவர்கள் பூசை செய்து வருகின்றனர். பாஞ்சராத்திர முறையில் மந்திரங்களுடன், தந்திரங்களும் முத்திரைகளும், சடங்குகளில் முக்கிய இடம் பெறுகின்றன.

வைகானச ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே முக்கிய சடங்குகளில் அனுமதிக்கின்றன. வழிபாட்டின்போது தூப தீபங்கள் காட்டுவதிலும் வரிசை முறை வேறுபடுகின்றது. வைணவ தீட்சையான திருவிலச்சினையை வலியுறுத்தும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு பாஞ்சராத்திரம் அணுக்கமானது.

கோயில் கட்டட, சிற்பக் கலை நூல்கள் (வாஸ்து நூல்கள்)

கோயில் கட்டட, சிற்பக் கலை நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே உள்ளன. ஆனால், இவை  தமிழகத்துக்கு உரிய கிரந்த வரிவடிவத்திலேயே எழுதப்பட்டுள்ளன. பல தமிழ் கலைச் சொற்களும் அவற்றில் உள்ளன. இவை வட மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் விளக்கப்படுவது தமிழ் நாட்டுக் கலைதான். 

கட்டட, சிற்பக் கலை  முதல் ஆசிரியன் மயன். மயனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. மயன் எழுதிய நூல் 'மயமதம்'. மயமதம் ஒரு தெளிவான, குழப்பமில்லாத கட்டட, சிற்பக்கலை நூல். 36 அதிகாரங்கள் 3300 பாடல்களைக் கொண்டது. சைவ நூல்களுள் ஒன்று. காமிகாகமத்தின் பூர்வ பகுதியில் உள்ள கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை சார்ந்த பாடல்கள் பல இதிலும் உள்ளன. சிற்பப் பகுதியில் சிவ, லிங்க உருவங்களுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. இதன் ஓலைச்சுவடிகள் கிரந்தம், தெலுங்கு அல்லது மலையாளத்தில் கிடைக்கின்றன. சோழர்கள், கங்கர்கள், நுளம்பர்கள் இதைப் பின்பற்றினர். இவர்களைத் தவிர சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், கம்போடியாவின் கெமர் அரசர்கள் ஆகியோரும் இதை பின்பற்றினர்.. பொ. ஆ. 7-8 ஆம் நூற்றாண்டிலேயே வழக்கில் இருநதாலும், பொ. ஆ. 11-12 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் தொகுக்கப்பட்டது. கேரளாவிலும் கர்நாடகத்திலும் பொ.ஆ. 10-11 ஆம் நூற்றண்டு வரை மயமதம் பயன்பாட்டில் இருந்தது. அதன் பிறகு அங்கே அவை தனித்துவமான கட்டடக்கலைகள் அறிமுகமாகியன 13-14 ஆம் நூற்றாண்டு தமிழ் மொழிபெயர்ப்பு தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ளது.

பின்னர் வெவ்வேறு காலங்களில் பலர் கட்டட, சிற்பக் கலை  நூல்களை யாத்துள்ளனர். மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் 32 நூல்களின் பட்டியலைத் தருகிறது. மனுசாரம் என்ற சிற்ப கட்டடக்கலை நூல் 28 நூல்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது. அவற்றில் 18 மானசார நூற் பட்டியலில் இல்லாதவை. ஆக இவ்வாறு அறியப்பட்ட 50 நூல்களில் தற்போது கீழ்கண்ட 6 நூல்களே உள்ளன. 
  1. மயமதம் 
  2. விஸ்வகர்மீயம் 
  3. மானசாரம் 
  4. ஐந்திர மதம் 
  5. மனுசாரம் 
  6. காஸ்யபம் 
இவை சிற்பக்கலை, கட்டடக்கலை இரண்டையும் விவரிக்கும் முழு நூல்கள். வாஸ்து சாஸ்திரம்  என்றும் இவற்றை அழைப்பர். 

11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காஸ்யபம் கோயில் கட்டடக் கலை பற்றிய விரிவான விவரணைகளை அளிக்கிறது. மானசாரம் 14 நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால நூல். 

மேலும், 'வாஸ்துவித்யை', 'மனுஷ்யாலயச் சந்திரிகை' என்னும் இரு சிறந்த மனை நூல்கள் உள்ளன.

இவை தவிர, 'சாரஸ்வதீயம்', 'பிராம்மீயம்', 'சகளாதிகாரம்' என்னும் மூன்று முற்றிலும் சிற்பக் கலை பற்றி பேசும் நூல்கள் உள்ளன. அவை கட்டடக்கலை, மனை பற்றி பேசும் வாஸ்து நூல்கள் அல்ல.

'சில்பரத்தினம்'எனும் பிற்கால சிறு வாஸ்து நூல் மயமதம், காஸ்யபம் ஆகிய இரு நூல்களின் கொள்கைகளைச் சுருக்கமாகச் சொல்கிறது.

'நாராயணீயம்', 'சித்ரபாகுல்யம்' ஆகிய இரு நூல்களின் சில அத்தியாயங்களே கிடைக்கின்றன.

'சர்வார்த்த சிற்ப சிந்தாமணி', 'சிற்ப ரத்தினாகரம்' இரண்டும் தமிழிலான மனை நூல்களாகும். 

கூடுதலாக

28 சைவ ஆகமங்கள் சிவனின் வெவ்வேறு உறுப்புகளில் இருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றன. 1. காமிகம் – திருவடிகள்; 2. யோகஜம் – கணைக்கால்கள்; 3. சிந்தியம் – கால்விரல்கள்; 4. காரணம் – கெண்டைக் கால்கள்; 5. அஜிதம் – முழந்தாள்; 6. தீப்தம் – தொடைகள்; 7. சூக்ஷ்மம் – குய்யம்; 8. ஸ்ஹஸ்ரம் – இடுப்பு; 9. அம்சுமதம்/அம்சுமான் – முதுகு; 10. சுப்ரபேதம் – தொப்புள்; 11. விஜயம் – வயிறு; 12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் – நாசி: 13. ஸ்வயம்புவம்/ஸ்வாயம்புவம் – முலை; 14. அனலம் /க்னேயம் – கண்கள்; 15. வீரபத்ரம்/வீரம் – கழுத்து; 16. ரௌரவம் – காதுகள்; 17. மகுடம் – திருமுடி; 18. விமலம் – கைகள், 19. சந்திரஞானம் – மார்பு; 20. பிம்பம் – முகம்; 21. புரோத்கீதம் – நாக்கு; 22. லளிதம் – கன்னங்கள்; 23. சித்தம் – நெற்றி; 24. சந்தானம் – குண்டலம்; 25. சர்வோக்தம்/ஸர்வோத்தம் – உபவீதம்; 26. பரமேஸ்வரம்/பரமேசுரம் – மாலை; 27. கிரணம் – இரத்தினா பரணம்; 28. வாதுளம் – ஆடை.


உதவி


கணபதி ஸ்தபதி வை; சிற்பச் செந்நூல்; 3 ஆம் வெளியீடு; 2001

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021



மரங்களும் கோயில்களும்

மரத் தெய்வங்கள்

பழங்காலம் முதல் இன்று வரை மரங்கள் தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றன. அவற்றுள் சில*
  • ஆல் 
  • அரசு  
  • இரட்டி (Zizyphus ஓர் jujube)
  • இலஞ்சி 
  • கடம்ப மரம் 
  • பலா 
  • வாகை 
  • வன்னி 
  • வெள்ளி (wood apple)
  • வேம்பு 
  • வேங்கை 

பவுத்த மதத்தில் மர வழிபாடு 

பவுத்த நூல்களில் இருந்து புத்தர் காலத்திற்கு முன்பே மரங்கள் வழிபாட்டில் இருந்தது தெரிகிறது. சுற்று கட்டுமானங்களோடோ, அவை இன்றி தனியாகவோ இருந்த அத்தகைய மரங்களை 'மர ஆலயங்கள்' (ருக்க-சைத்தியம், விருக்ஷ சைத்தியம் அல்லது சைத்திய விருக்ஷம்) என்று அந்த நூல்கள் அழைக்கின்றன. நறுமண நீரால் தூய்மை செய்தல், மலர்கள் மலர் மாலைகள் அணிவித்தல், சுற்றி வர மணல் தூவுதல் போன்ற சடங்குகளைச் செய்துள்ளனர். 

உருவெல ('புத்த கயா'வின் பழைய பெயர்) வில் இருந்த போதி (அரச) மரம் புத்தர் காலத்திற்கு (கி.மு. 563 - 483) முன்னரே வழிபாட்டில் இருந்தது. அந்த மரத்தில் வசித்த தேவர்கள்/ யக்ஷர்கள் இடம் திருமண, குழந்தைப் பேறு வரங்கள் வேண்டி படையலிட்டு வழிபட்டுள்ளனர். 

புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றத்தைத் தொடர்ந்து போதி மரம் பவுத்தர்களுக்கு புனிதமானதாக ஆகியது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதலே போதி மரத்தைச் சுற்றி 'போதி கர' என்னும் கோயில்கள் அமைக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் அமராவதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்தூபியின் சிற்பங்களில் இரண்டு அத்தகைய அமைப்புகளைக் காட்டுகின்றன. அவை மரத்தைச் சுற்றி‌ சதுர அல்லது வட்ட வடிவிலான இரண்டு அல்லது மூன்று தள திருச்சுற்று மண்டபங்கள், நுழைவாயில்கள் அமைந்திருந்ததை காட்டுகின்றன. இவை கோயில் திருச்சுற்றுகளில் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட திருச்சுற்று மாளிகைகள் போல் உள்ளன.

ஸ்ரீலங்கா நீலகம என்ற இடத்தில் கண்டிபிடிக்கப்பட்ட 8-9 ஆம் நூற்றண்டு  போதி கர.



நீலகம போதி மர பீடம்

சங்க இலக்கியத்தில் மர வழிபாடு

"மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள் 
கொடியோர்த் தெறூஉம் என்ப"
    - குறுந்தொகை 87, கபிலர்

(பொது இடத்தில் உள்ள கடம்ப மரத்தில் வாழும் அச்சம் தரும் பழமையான கடவுள் கொடியவர்களை வாட்டும் என்பர்) 

மரத்தடி தெய்வங்கள்

பின்னர் மரத்தில் உறைந்திருந்த தெய்வங்களை மரத்தடியில் நிறுவி மக்கள் வழிபடத் தொடங்கினர். இதில் சிறு தெய்வங்கள் மட்டுமல்ல, பெரும் தெய்வங்களும் அடங்கும்.

சங்க இலக்கியமான அகநானூறு ஆல மரத்தைச் சுற்றி செங்கற்களால் ஆன சுற்றுச் சுவர் இருந்ததையும் படையலிட்டு வழிபாடு நடந்ததையும் விவரிக்கிறது. 

இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து
எழுதணி கடவுள் போகலற் புல்லென்று 
ஒழுகுபலி பறந்த மெழுகாப் புன்திணைப்
பால்நாய் துன்னிய பறைக்கண் சிற்றில்
குயில்காழ் சிதைய மண்டி அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்லிறைப் பொதியி லானே. 

    - கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

செங்கல்லாலான நீண்ட சுவரின் உத்திரங்கள் வீழந்துவிட
மணிப்புறாக்கள் விட்டொழிந்த மரம் சேர்ந்த மாடத்தினையும்
எழுதப்பெற்ற அழகிய கடவுள் வெளியேறிவிட்டதால் பொலிவிழந்து
இடைவிடாமல் நிகழும் பலி மறந்துபோன மெழுகப்படாத புல்லிய திண்ணையில்
பால்தரும் நாய் தங்கிய தேய்ந்துபோன இடத்தையுடைய சிறிய அறைகளை உடைய
கடைந்து உருவாக்கப்பட்ட தூண்கள் சிதையுமாறு நெருக்கமாகக் கூடி வேலின் முனைபோன்ற
கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக் கொண்டதால்
கூரையும் இல்லாமல் போன தாழ்வாரத்தை உடைய அம்பலத்தில்

"ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்
கால்கோள்"
    - கலித்தொகை 83; மருதன் இளநாகனார்

(ஆலமரத்தடியில் அமர்ந்த சிவனின் மகன் முருகனுடைய விழாவின் தொடக்கம்)

கலித்தொகை ஆலமர நிழலில் இறைவனை வைத்து வணங்கியதை, “துறையும் ஆலமும், தொல்வலி மராஅமும் முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழுஉ’’ என்றும் விவரிக்கிறது.

சிவன் தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தின் நிழலில் அமர்ந்தபடி சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை உபதேசித்தார். இதை திருநாவுக்கரசர் ‘ஆலினிற் கீழிருந்து ஆரணம் ஓதி’ என்றும், மாணிக்கவாசகர் ‘அன்றாலின் கீழிருந்து அறமுறைத்தான் காணேடி’ என்றும் பாடியிருக்கின்றனர். இதனால் சிவன் 'ஆலமர்ச்செல்வன்' என்று அழைக்கப்படுகிறான்.

திருமால் ஆலிலை மேல்படுத்து மிதப்பவன். முருகன் கடம்பன். 

சுங்கர்கள் காலக் கற்பலகை (பொ.யு.மு 2 ஆம் நூற்றண்டு)
மரத்தடி சிவலிங்கத்தை வழிபட மாலை ஏந்தி நிற்கும் கந்தர்வர்கள்

கண்ணப்ப நாயனார் மரத்தடி லிங்கத்தை வழிபடுதல்

மரத்தடி நாக தேவதைகள்

கோயில் தல மரங்கள்

கோயில்களின், குறிப்பாக சிவன் கோயில்களின் பெருமை நான்கு:
  • மூர்த்தி - கோயில் கொண்ட இறைவனது பெருமை
  • தலம் - இறைவன் இந்த இடத்தை தேர்வு செய்து கோயில் கொண்டதற்கான காரணம் புராணங்களால் நிறுவப்பட்ட பெருமை.
  • தீர்த்தம் - இறைத்தன்மை வாய்ந்த நீர் நிலை, ஆறு
  • தலமரம் - இறைத்தன்மை வாய்ந்த மரம்
தலமரம் இறை சக்தி உள்ளது. இம்மரங்களின் வழிபாடே பின்னர் கோயில் அமைப்பாக திரண்டு வந்திருக்கலாம். 

கோயில்களில் உறையும் இறைவனின் இறைத்தன்மையை தக்கவைக்க 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்யப்படவேண்டும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் இறைவனின் இறைத்தன்மை கொடிமரத்திற்கு இடம் பெயர்ந்து விடும், 13 ஆண்டுகளுக்குப் பிறகும் குடமுழுக்கு செய்யப்படாவிட்டால் இறைத்தன்மை அங்கிருந்து தல மரத்திற்கு இடம் பெயர்ந்து விடும் எனப்படுகிறது. இதிலிருந்து தலமரம் கோயிலின் இறைத்தன்மையின் பெட்டகமாக விளங்குவது தெளிவாகிறது.

பல இடங்களில் தல மரங்களின் பெயர்களே மூலவரின் பெயராகவும் தலத்தின் பெயராகவும் வழங்கி வருகின்றன.#
  • ஆலமரம் - திருவாலங்காடு, திருக்குற்றாலம் (தலையாலங்கானம் ஆல்காடு)
  • மாமரம் - கச்சி ஏகம்பன் (காஞ்சி)
  • புன்னைமரம் - புன்னை வனம் (மைலாப்பூர்)
  • மருதமரம் - திருவிடைமருதூர்
  • பாதிரி - திருப்பாதிரிப்புலியூர்
  • பனை - திருவோத்தூர் என்னும் செய்யாறு, திருப்பனந்தாள், வன்பார்த்தான் பனங்காட்டூர் என்னும் திருப்பனங்காடு
  • பக்தி (இலந்தை) - பத்ரிகா ஆசிரமம்
  • முல்லை - திருமுல்லைவாயில்
  • கடம்பு - கடம்பவனம் (மதுரை)
  • வேம்பு (வேல்) - திருவேற்காடு
  • புன்கு - திருப்புன்கூர்
  • நெல் - திருநெல்வேலி

நன்றிக் கடன்

*K. R Srinivasan; Temples of South India; 4th Ed; 1998 Reprint 2017; NBT
#https://ta.wikipedia.org/wiki/தலவிருட்சமும்_தலங்களும்








விமானம்

விமானம் என்பது இறைவனது வடிவம் அமைந்திருக்கும் கருவறைக் கட்டடம். வடமொழியில் 'பிரசாதம்'.

விமானம் மட்டுமே கூட கோயில் ஆக அமைய முடியும். ஆனால் விமானம் இல்லாது மற்ற கோயில் பகுதிகள் (மண்டபங்கள், கோபுரம் முதலியன) கோயில் ஆக முடியாது.

விமானம் விண்ணோக்கி எழும் இறைக்குறியீடு. ஆகமங்கள் அது 'ஸ்தூல லிங்கம்' என்றும், கருவறை இறைவன் 'சூஷ்ம லிங்கம்' என்றும் கூறுகின்றன. விமானம் உடல், இறையுருவம் உயிர்.

வடமொழியில் வி+மானம் என்று பிரிந்து 'சிறந்த அளவு' என்று பொருள்.

கோபுரம், நுழைவாயில் கட்டிடத்தை மட்டுமே குறிக்கும்,

விமானங்களின் வகைகள்

கலைப்பாணியைப் பொறுத்து விமானங்கள் மூன்று வகைப்படும்.
  • திராவிடம்
  • நாகரம்
  • வேசரம்
திராவிட விமானம் தளங்களால் அமைந்த நேர்கோட்டு பக்கங்களைக் கொண்ட பிரமிட் வடிவம் உடையது.

நாகர விமானம் சதுரக் கருவறைக்கு மேலே வளைந்த பக்கங்கள் கொண்ட மேற்பகுதியையும் (சிகரம்), அதன்மேல் வட்ட வடிவமான, ஓரத்தில் நெல்லி சுளைகள் போன்ற பிதுக்கங்களை உடைய வட்டும் (அமலகம்) கொண்டது.

வேசர விமானம் நாகர, திராவிட விமானங்களின் கலப்புப் பாணி.

விமான வகைகள் 
(நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

(காமிகாகமம் மட்டும் கூடுதலாக மூன்று வ்கை விமானங்களைக் குறிப்பிடுகிறது - சார்வதேசிகம், காலிங்கம், வராடம்)

அமைவிடம்  வகைகள் 

மேற்கண்ட மூவகை விமானங்கள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் தோன்றி வளர்ந்தவை.
  • திராவிட வகை விமானங்கள் கிருஷ்ணா-துங்கபத்திரை நதிகளுக்கு தெற்கில். 
  • நாகர வகை விமானங்கள் பொதுவாக விந்திய மலைக்கு வடக்கே .
  • வேசர விமானங்கள் இடைப்பட்ட தக்காணம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில்
திராவிட விமானத்தின் அங்கங்கள்

திராவிட விமானம் அடிப்படையாக ஆறு அங்கங்களைக் (ஷட்வர்க்கம், ஷடாங்கம்) கொண்டது. அவை கீழிருந்து மேலாக:
(கோயில் கட்டட அங்கங்களையும் அவற்றின் துணை உறுப்புகளையும் கீழிருந்து மேலாக சொல்வது மரபு)
  1. அதிஷ்டானம்  
  2. பித்தி 
  3. பிரஸ்தரம் 
  4. கிரீவம் 
  5. சிகரம்
  6. ஸ்தூபி 
விமானத்தின் 6 அங்கங்கள்

காமிகாகமம் மட்டும் கூடுதலாக இரு உறுப்புகளைச் சொல்கிறது. தாங்குதளத்திற்கு கீழே 'மூலம்', கலசத்திற்கு மேலே 'சூலம்'. மூலம் எங்கும் காணக்கிடைக்கவில்லை. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் விமானத்தில் கலசத்தின் மேல் சூலம் உள்ளது. சூலம் மாமல்லபுரம் கணேச ரதத்தில் கலசங்களுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ சைலம் விமானத்தின் ஸ்தூபியின் மேல் சூலம்

விமானம் இறைவன் உடல் என்று கொண்டு அதன் ஆறு அங்கங்களை மனித வடிவிலான இறைவனின் உடல் உறுப்புகளோடு ஒப்பிடும் மரபு உள்ளது. 
  • அதிஷ்டானம் - அடி (பாதம்)
  • பித்தி - கால் 
  • பிரஸ்தரம் - தோள் 
  • கிரீவம் - கழுத்து
  • சிகரம் - தலை 
  • ஸ்தூபி - முடி 
இதில் பிரஸ்தரம் முதல் ஸ்தூபி வரையான ஒப்பீடு தெளிவானது. அதிஷ்டான, பித்தி ஒப்பீடுகள் குறித்து மாற்று கருத்துகள் உள்ளன. உபபீடம் - பாதம், அதிஷ்டானம் - முட்டி, கும்ப பஞ்சரம் - தொப்புள், தூண்கள் - கைகள், மகா நாசிகை - மூக்கு, ஷூத்ர நாசி - கண்கள் என்ற வர்ணனையும் உண்டு. 

திராவிட விமானங்களின் வகைகள்

திராவிட பாணி விமானங்கள் மூன்று வகை: 
  • நாகரம் - 4 பட்டை வடிவம்
  • வேசரம் - வட்ட வடிவம்
  • திராவிடம் -  6 / 8 பட்டை வடிவம் (பல பட்டை)
இதை விமானங்களின் மூவகைப் கலைப் பாணிகளோடு குழப்பிக்கொள்ளக் கூடாது.

மேற்கண்ட விமான வகைகளை இரு வகையாக பிரிக்கலாம்.
  • சுத்த - உபானம் முதல் ஸ்தூபி வரை (விமானத்தின் ஆறு அங்கங்களும்) ஓரே வடிவமாக இருப்பது
  • கலப்பு - உபானம் முதல் பிரஸ்தரம் வரை நாகரமாகவும் அதற்கு மேல் வேறு வடிவமாகவும் இருப்பது.
நாகர விமானம் சுத்த நாகரமாகவே அமைய முடியும். கலப்பு நாகர வகை இல்லை.

வேசர, திராவிட விமானங்கள் சுத்த, கலப்பு இரு வகையாகவும் இருக்கலாம். 
  • சுத்த வேசரம், சுத்த திராவிடம் - உபானம் முதல் ஸ்தூபி வரை (விமானத்தின் ஆறு அங்கங்களும்) வேசரமாகவோ, திராவிடமாகவோ இருப்பது.
  • கலப்பு வேசரம், கலப்பு திராவிடம் - உபானம் முதல் பிரஸ்தரம் வரை நாகரமாகவும் அதற்கு மேல் கண்டம் மற்றும் சிகரத்தின் வடிவம் வேசரம் அல்லது திராவிடமாக இருப்பது. 
ஸ்தூபி, கண்டம் மற்றும் சிகரத்தின் வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும்  (பழைய கல்லாலான ஸ்தூபிகள் அவ்வாறே உள்ளன). ஆனாலும் நடை முறையில் பிற்காலத்தில் புதிதாகவோ, உடைந்த பழைய ஸ்தூபிகளுக்குப் பதிலாகவோ அமைந்த ஸ்தூபிகள் வேசரமாகவே உள்ளன. எனவே, கண்டம் மற்றும் சிகரத்தின் வடிவமே விமானம் நாகரமா, வேசரமா, திராவிடமா என்பதைத் தீர்மானிக்கிறது. (கண்டமும் சிகரமும் ஒரே வடிவை உடையவை என்பதாலும் கண்டத்தைவிட சிகரத்தை தெளிவாகக் காண இயலும் என்பதாலும் நடைமுறையில் சிகரத்தின் வடிவைக் கொண்டு திராவிட விமானத்தின் வகையை எளிதாகத் தீர்மானிக்கலாம்).

நாகர விமானம்

விமானம் முழுவதும், அதாவது அதிஷ்டானத்தின் கீழ் உறுப்பான உபானத்தில் இருந்து கலசம் வரை, நான்கு பட்டை வடிவம் கொண்டது.இது இரு வகை:
  • சதுரம் (சதுரஸ்ரம்)- இது 'கூடம்' எனப்படும். ஒற்றைக் ஸ்தூபி உடையது.
  • செவ்வகம் (ஆயதஸ்ரம், ஆயத்த நாகரம்) - வண்டி கூண்டு போன்ற சிகர வடிவம் உடையது. வரிசையாக அமைந்த ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்தூபிகள் கொண்டது. இது இருவகைப்படும். 
    • ஆறு அங்க வகை 'சாலை' அல்லது 'சாலாகாரம்' எனப்படும். இது பெருமாள், அம்மன், சப்தகன்னியர் கோயில்களுக்கு உரியது. 
    • கிரீவம் இல்லாமல் மற்ற ஐந்து அங்கங்கள் மட்டுமே உள்ள வகை 'சபை' அல்லது 'சபாகாரம்' எனப்படும். இது குவி வட்ட வடிவில் நான்கு புறமும் சரிந்த சிகரத்தை உடையது. சிகரத்தில் அலங்கார அமைப்புகள் இருப்பதில்லை.

நாகர விமான வகைகள்
(ஆயதஸ்ரம், ஆயத சதுரஸ்ரம் என்றும் அழைக்கப்படும்)


சதுரஸ்ர நாகர விமானம் (கூடம்)
(கல்லாலான ஸ்தூபியும் சதுரமாய் இருப்பதைக் காண்க)

சாலாகார விமானம்

சபை/ சபாகாரம் - சிதம்பரம் பொன்னம்பலம்

வேசர விமானம்

கண்டம் மற்றும் சிகரம் வட்டவடிவம் கொண்டது. இது மூன்று வகை:
  • வட்டம் (விருத்தம் / வார்த்துலம்)
  • நீள் வட்டம் 
  • தூங்கானை வடிவம் (கஜபிருஷ்டம், ஹஸ்திபிருஷ்டம்)
இவை சுத்த வகையாகவோ, கலப்பு வகையாகவோ இருக்கலாம்.


நீள் வட்ட வடிவம் மூன்று விதமாக அமையலாம். இவையும் சுத்த வகையாகவோ அல்லது கலப்பு வகையாகவோ அமையலாம்.



விருத்த வேசர விமானம் ஒரு ஸ்தூபியையும், விருத்தாயத, கஜபிரிஷ்ட விமானங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்தூபிகளையும் கொண்டிருக்கும்.

கஜபிருஷ்டம் 'துவையஸ்ர வேசரம்' என்றும் அழைக்கப்படும். 

மாமல்லபுரத்தில் காணப்படும் குட்டி விமானம் சுத்த விருத்த வேசர விமானம் ஆகும். மயிலாடுதுறை அருகிலுள்ள நரசிங்கம்பேட்டையிலும் சுத்த வேசர விமானம் உள்ளது.

சுத்த விருத்த வேசரம்
மகாபலிபுரம் 
(உபபீடம் மட்டும் எண் பட்டை)

சுத்த விருத்த வேசரம்

கலப்பு விருத்த வேசர விமானம் 
எசாலம் (விழுப்புரம் அருகில்)

கஜபிருஷ்ட விமானங்கள் தொண்டை மண்டலத்திற்கு உரியவை. அங்குள்ள புவியியல் அமைப்பின்படி மேற்கிலுள்ள ஏரிகள், மேட்டுப்பகுதிகளில் இருந்து வேகமாக வரும் நீரை எதிர்கொள்ளும் வகையில் உருவாகியது கஜபிருஷ்ட வடிவம். கஜபிருஷ்ட விமானங்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியவை. மேற்கு பக்கம் நீர் வேகத்தை எதிர்கொள்ள வட்டமாக அமைந்தவை.


கலப்பு கஜபிருஷ்ட விமானம்
வீரட்டானேசுவரர் கோயில், திருத்தணி

தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் ஜ்வரஹரேசுவரர் கோயில், அழகர் கோயில் விமானங்கள் மட்டுமே சுத்த விருத்தாயத வேசர வடிவம்  உடையவை. 

சுத்த விருத்தாயத வேசர விமானம்
ஜ்வரஹரேசுவரர் கோயில், காஞ்சிபுரம்

கலப்பு விருத்தாயத வேசர விமானம்
திருத்தங்கல் பெருமாள் கோயில்
(நீட்டிய முகப்பு நாசியும் (சுக நாசி), பூமி தேசத்தில் பற்களும் கவனிக்கத்தக்கன)

நீள் வட்ட வடிவம் மூன்றாம் வகை
ரங்கநாதர் கோயில், எருக்கம்பட்டு 

திராவிட விமானம்

ஆறு அல்லது எட்டு பட்டை வடிவ கண்டம், சிகரம் உடையது. (கீழ் மூன்று அங்கங்கள் நான்கு பட்டையாக இருக்கலாம்). இது இரு வகை:
  • ஆறு பட்டை (ஷடஸ்ரம்)
  • எட்டு பட்டை (அஷ்டஸ்ரம்)
இந்த வடிவங்கள் சுத்த வகையாகவோ, கலப்பு வகையாகவோ இருக்கலாம்.

பட்டைகள் சமமாகவோ  அல்லது நீள் வடிவமாகவோ இருக்கலாம்.



முற்கால முழு திராவிட விமானம் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை. தற்காலத்தில் பவானி சங்கமேசுவரர் கோயில் அம்மன் சந்நிதி, காரைக்குடி தமிழ்த்தாய் கோயில், திருவண்ணாமலை வராகி கோயில், திருவண்ணாமலை யோகி சூரத் குமார் கோயில் போன்ற முழு 8 பட்டைவிமானங்கள் உள்ளன. 

சுத்த அஷ்டஸ்ர திராவிட விமானம்
பவானி சங்கமேசுவரர் கோயில்; காரைக்குடி தமிழ்த்தாய் கோயில்

சுத்த அஷ்டஸ்ர திராவிட விமானம்
திருவண்ணாமலை வராகி கோயில்

சுத்த அஷ்டஸ்ர திராவிட விமானம்
திருவண்ணாமலை வராகி கோயில்

கலப்பு அஷ்டஸ்ர திராவிட விமானம் (எட்டு பட்டை)
நண்டாங்கோயில் கற்கடேசுவரர் கோயில்

மாமல்லபுரம் நகுல சகாதேவ ரதத்தில் லலாட மகா நாசிகையில் 6 பட்டை விமானத்தின் சிற்பம் உள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட சில கோயில்கள் (வட பழனி, அவினாசி முதலியன 6 பட்டை திராவிட கோயில்களாக உள்ளஅன,

கலப்பு ஷடஸ்ர (6 பட்டை) திராவிட விமானம்

விமான வகைகள் சுருக்கமாக

 

நாகரம் (3) 

சதுரம் 

(சதுரஸ்ரம்) - கூடம் 

 

செவ்வகம் 

(ஆயதஸ்ரம்/ ஆயத சதுரஸ்ரம்) 

1. சாலை 

(சாலாகாரம்) 

2. சபை 

(சபாகாரம்) 

வேசரம் (5) 

வட்டம் 

(விருத்தம்) 

 

நீள் வட்டம் 

1. விருத்தாயதம் 

2. ஆயத விருத்தம் 

3. நாகரத்தில் மூலைகள் மட்டும் விருத்தம் 

திவ்யஸ்ர விருத்தம் 

(கஜபிருஷ்டம்) 

 

திராவிடம் (2) 

6 பட்டை 

(ஷடஸ்ரம்) 

 

8 பட்டை 

(அஷ்டஸ்ரம்) 

 


நாகரம் சுத்த நாகரமாக மட்டும்தான் இருக்கும். வேசர, திராவிட வகைகள் சுத்தமாகவோ, கலப்பாகவோ இருக்கலாம்.

தலம்

பித்தியும், பிரஸ்தரமும் சேர்ந்து ஒரு 'தலம்' ஆகும். இதைத் 'தளம்' என்றும் 'நிலை' என்றும் அழைக்கலாம்.

ஒரு தல விமானத்தின் பிரஸ்தரத்திற்கும், கிரீவத்திற்கும் இடையில் கூடுதல் தளங்கள் அமையும். எத்தனை தலங்கள் இருந்தாலும் ஒரு விமானத்தில் அதிஷ்டானம், கிரீவம், சிகரம், ஸ்தூபி ஆகிய 4 உறுப்புகள் ஒரு முறைதான் இடம்பெறும். 

இரு தல விமானம் 
  1. அதிஷ்டானம்
  2. பித்தி
  3. பிரஸ்தரம்
  4. பித்தி
  5. பிரஸ்தரம்
  6. கிரீவம்
  7. சிகரம்
  8. ஸ்தூபி

4 , 5 அங்க விமானங்கள் 

மாமல்லபுரம் திரௌபதி ரதம் அதிஷ்டானம், பித்தி, சிகரம், ஸ்தூபி ஆகிய 4 அங்கங்கள் மட்டுமே கொண்ட விமானம். விமானங்களின் தலங்களின் மேல் உள்ள ஹாரங்களில் உள்ள கர்ணக் கூடுகள், சாலைகள் என்னும் சிறு விமானங்கள் இவ்வகை 4 அங்க விமானங்களாக அமைவதுண்டு..

நான்கு அங்க விமானம் (பிரஸ்தரம், கிரீவம் இல்லை) 
திரௌபதி ரதம், மாமல்லபுரம்

இது போல அதிஷ்டானம், பித்தி, பிரஸ்தரம், சிகரம், ஸ்தூபி  ஆகிய 5 அங்கங்கள் மட்டுமே கொண்ட, கிரீவம் இல்லாத விமானங்கள் உண்டு. மேலே குறிப்பிடப்பட்ட சபாகார விமானம் இவ்வகையைச் சேர்ந்தது.

5 அங்க விமானம் (கிரீவம் இல்லை)
வெங்களூர் கண்டமாதேவி அருகில்
 
துணை

மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 

ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ்  http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3

Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)

சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I

சௌந்தரி ராஜ்குமார், சுரேந்திரன் ; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

திரௌபதி ரதம் படம்: Samrajclicks, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons



கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...